திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 12
உலக மகா திருட்டு!
திருவாரூர்
பேருந்து நிலையம் எதிரே.
தைலம்மை
திரையரங்கம்.
திரையரங்க
குளிர்சாதன வசதியில் குளிர் உடலை நடுக்க, பெரிய திரையில் சண்டைக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
அவன்
தன் பார்வையைத் திரை மீது வைத்திருந்தாலும், கவனம் முழுக்கப் பக்கத்து இருக்கையில்தான்
இருந்தது. அவனுக்கு அருகே பாப்கார்ன் பக்கெட்டைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள் அவள்,
அதில் சிலவற்றை எடுத்து வாயில் போட்டபடி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்
கவனம் முழுவதும் திரையிலேயே படிந்திருந்தது.
அவள்
சட்டென்று தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் அவனுடைய கண்களை ஒரு மில்லி
செகண்ட் தொட்டு மீண்டன. அவ்வளவுதான்.
அந்த
ஒரு நொடி.
அது
வெறும் பார்வையில்லை. பைட்ஸில் சொல்ல முடியாத டேட்டா டிரான்ஸ்பர்.
அவன்
அருகில்தான் இருக்கிறான். நேருக்கு நேர் பார்ப்பதில் ஒன்றும் தடையும் இல்லை, பிரச்சனையும்
இல்லை. ஆனாலும் அவ்வபோது நிகழ்கிறது அந்தத் திருட்டுப் பார்வைப் பார்க்கும் களவாணி
வேலை.
"என்ன?
அந்தப் பிராஜெக்ட் முடிஞ்சதா?" இப்போது அவனைப் பார்க்காமலே, அவள் மெல்லிய குரலில்
கேட்டாள். சுற்றிலும் தியேட்டர் சத்தம் இரைந்தாலும், அவள் குரலில் அத்தனை இயல்பு.
"முக்கால்வாசி
ஓவர். நைட் எப்படியும் முடிஞ்சிடும்." என்றான் அவன், தன் விரல்களை இருக்கையின்
கைத்தாங்கியில் தட்டியபடி.
அவள்
லேசாகச் சிரித்தாள். அந்த இருட்டிலும் அவளது புன்னகையின் ஓரத்தில் ஒரு சின்ன சுருக்கம்
வெளிச்சமாய் தெரிந்தது. "குட். சீக்கிரம் முடி. நாளைக்கு வீக்கெண்ட்."
அவள்
பேச்சை முடித்துவிட்டு மீண்டும் திரை வெளிச்சத்தில் மூழ்கினாள்.
அவன்
இடைவேளைக்கான லைட் எரியவும் ஸ்நாக்ஸ் கௌன்ட்டருக்கு எழுந்து சென்றான்.
அவனுக்குள்
ஏதோ ஒன்று ஜிவ் என்று இருந்தது. மனம் ஒரு கவிஞனைப் போல நினைக்க ஆரம்பித்தது.
"காதல்
என்பது வெறும் மணி நேரப் பேச்சுகளிலோ, வார இறுதி சினிமாக்களிலோ, வாட்ஸ்அப் மெசேஜ்களின்
நீளத்திலோ மட்டும் இல்லை.
அவள்
அவனைத் தியேட்டர் இருட்டில் கடக்கும் போது சட்டென்று பார்க்கும் அந்த ஒரு வினாடித்
திருட்டுப் பார்வை. அதில் இருக்கும் அடர்த்தி இருக்கிறதே, அது முழுமையான காதலை விடவும்
மிகப் பெரியது.
வள்ளுவர்
இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே.
"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது." (குறள்,
1092)
என்று
சும்மாவா எழுதினார்?
அவன்
பார்வையில் பாதி, அவளது பார்வையில் பாதி எனப் பிரித்துக் கணக்குப் போட முடியாது. அந்தச்
சின்னஞ்சிறு திருட்டுப் பார்வை தரும் கிக். அது அரைப்பங்கு இல்லை, முழு உலகத்தை விடவும்
பெரிது.
முழுக்க
முழுக்க நேராகப் பார்த்து காதலைச் சொல்வதை விட, அந்தத் திருட்டுப் பார்வை தருவது அரைப்
பங்கு இன்பமல்ல. அதையும் தாண்டிய பெருங்கடல்!"
இப்படி
நினைத்தபடியே அவன் இரண்டு கூல்ட்ரிங்க்ஸ்களுடன் திரும்பினான்.
"தேங்க்ஸ்,"
அவள் அதை வாங்கினாள். ஆனால், அவள் அவனைப் பார்க்கவில்லை. திரையில் இடைவேளைக்குப் பிறகான
காட்சி தொடங்க, அதைப் பார்த்தபடியே சிரித்தாள்.
ஆனால்,
அவனுக்குத் தெரியும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இருட்டிலும் அவள் மீண்டும் ஒருமுறை
திருட்டுத்தனமாகப் பார்ப்பாள். அந்த ஒரே ஒரு சிறு நோக்கம் அவனின் மொத்தக் காதலையும்
கொள்ளையடித்துச் செல்லும். இப்படி எப்போதும் திருடிச் செல்பவள் அவள்; ஆனானல், கைதாவதோ
இவன்
ஆனாலும்,
அந்த ஒரு மில்லிசெகண்ட் திருட்டுப் பார்வைக்காகவே அவன் அந்த மெண்டல் டார்ச்சர் தரும்
ஐநூறு ப்ராஜெக்டுகள் கூட செய்யத் தயார்.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment