யோக்கியன் வருகிறான், செம்பைத் தூக்கி உள்ளே வை!
இந்தத்
தேர்தல் நேரத்தில் இந்தத் தலைப்பு ரொம்ப பொருத்தமானதுதான்.
படிப்படியாக
நாம் தலைப்பிற்கு வருவதற்கு முன் ஒரு கேள்வி.
உண்மை
என்றால் என்ன?
ஸ்கூல்
பையனிடம் கேட்டால், பரீட்சையில் காப்பியடிக்காமல் இருப்பது என்பார். ஒரு கணவனிடம் கேட்டால்,
நேற்று இரவு எங்கே இருந்தேன் என்று மனைவியிடம் சொல்லும் ஓர் அபாயகரமான விளையாட்டு என்பார்.
ஆனால் ஓர் அரசியல்வாதியிடம் கேட்டால்…? சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வளைக்கப்படும் ஒரு ரப்பர்
பேண்ட் என்பார்.
அப்படியானால்
உண்மை என்பதுதான் என்ன?
உண்மை
மற்றும் நம்பிக்கை ஆகிய இவை இரண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல, நம் மனுஷ ஜாதியின் அஸ்திவாரம்.
இப்போது
ஃபேக் நியூஸ், பொலிடிகல் ஸ்பின் என்றெல்லாம் கலர் கலராகப் பெயர்கள் வைத்திருக்கிறோம்.
இதெல்லாம் டொனால்ட் ட்ரம்ப்போ அல்லது டோனி பிளேயரோ கண்டுபிடித்தது என்று நினைத்தால்
நீங்கள் அப்பாவிகள்.
அந்தக்
காலத்துக் கிரேக்கத்தில் சோஃபிஸ்ட் என்று ஒரு கூட்டம் இருந்தது. இவர்கள் இன்றைய பி.ஆர்.ஓக்கள்
மாதிரி. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வோம், அது உண்மையோ இல்லையோ என்று விளம்பரம்
செய்தவர்கள்.
பிளேட்டோ
அப்பவே சொன்னார், ஜனநாயகம் என்பது கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு படி மேலே அவ்வளவுதான்.
அவருக்கு அரசியலே பிடிக்கவில்லை. உங்களுக்கும் கூட அப்படியே இருக்கலாம்.
தத்துவத்தில்
ஒரு சின்ன நுணுக்கம் இருக்கிறது.
என்னிடம்
10 சட்டைகள் இருக்கின்றன என்பது ஒரு உண்மை. ஆனால் இதனால் உலகிற்கு என்ன லாபம்? இது
வெறும் டேட்டா.
ஆனால்
நேர்மை இருக்கிறதே. இதுதான் முக்கியம்.
ஒருவர்
சாகக் கிடக்கும்போது, தன் வாழ்க்கையைப் பற்றி ஓர் உண்மையான புரிதலைத் தேடுகிறார். அது
அவருக்கு நிம்மதியைத் தருமா என்பது முக்கியமல்ல, அது உண்மையா என்பதுதான் முக்கியம்.
நேர்மை
இல்லாத அன்பு, ஐஸ்கிரீம் மீது வைத்திருக்கும் காதலைப் போன்றது. ஐஸ்கிரீம் உருகினால்
தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் ஒரு மனிதனை நாம் அப்படிப் பார்ப்பதில்லை.
ஹிட்லரை,
முசோலினியை நாம் ஏன் சாத்தான்கள் என்கிறோம்? அவர்களை நாம் மனிதர்களாகப் பார்ப்பதால்
தான். ஒரு நாயைக் கெட்ட நாய் என்று சொல்லலாம், ஆனால் தீய நாய் என்று சொல்ல மாட்டோம்.
மனிதர்களுக்கு மட்டும்தான் அது அப்ளை ஆகும்.
இப்போது
விசயத்திற்கு வருவோம்.
அரசியல்வாதிகளின்
ஒரே குறிக்கோள் ஓட்டு.
அதற்காக
அவர்கள் புள்ளிவிவரங்களைப் உருட்டுவார்கள். அதில் இருக்கும் உண்மை நிஜமான கேள்விக்குறி.
உதாரணத்துக்கு நம் நாட்டுக்குள் இவ்வளவு பேர் உள்ளே வருகிறார்கள் என்பார்கள். நீங்கள்
குடியேற்றத்தை வெறுப்பவர் என்றால், அந்தப் புள்ளிவிவரம் உங்களுக்கு உண்மை. இல்லையென்றால்
அது வெறும் நம்பர்.
இங்கேதான்
ஒரு சிக்கல் வருகிறது. ஓர் அரசியல்வாதி உங்களை ஓர் அறிவுள்ள மனிதனாகப் பார்க்காமல்,
ஒரு ஓட்டு இயந்திரமாக மட்டும் பார்த்தால், அங்கே நேர்மை செத்துவிடுகிறது. உங்களை அவர்
ஏமாற்றத் துணியும்போதே, உங்களை அவர் ஒரு சக மனிதனாக மதிக்கவில்லை என்று அர்த்தம். உங்களை
ஒரு பொருள் ஆக ஆக்கிவிடுகிறார். உங்களை ஒரு பொருளாக்கி உங்களை வாங்க அவர் எந்த உத்தியையும்
பயன்படுத்துவார். உண்மை அங்கே அடிபட்டு ஐசியுவில் கிடக்கும்.
உண்மை
என்பது சயின்ஸ் லேப்பில் இருக்கும் டெஸ்ட் டியூப் அல்ல, அது நம் இதயத்தின் ஒரு பகுதி.
அரசியல்வாதிகள் நம்மிடம் பொய் சொல்லும்போது, அவர்கள் நம்மிடம் இருந்து ஓட்டுகளை மட்டும்
திருடுவதில்லை, நம்முடைய மனிதத் தன்மையையும் சேர்த்துத்தான் திருடுகிறார்கள்.
அரசியல்வாதி
சொல்லும் உண்மைக்கும், ஒரு சாமானியன் தேடும் உண்மைக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான்
இன்றைய உலகத்தின் மிகப்பெரிய துயரம்.
ஆக உண்மை
என்பது என்னவென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவரவர்களின் சுயலாபத்திற்கு
ஜோடித்திருக்கும் ஒன்று. ஆனால் உண்மையான உண்மை என்ற ஒன்று இருக்கும் அல்லவா! அதுதான்
உண்மை. அதைத் திரிக்க முடியாது, மாற்ற முடியாது. அப்படிப்பட்ட உண்மைகளில் ஒன்றுதான்
அரசியல்வாதிகளிடம் உண்மை இருப்பது இல்லை என்பதும், அப்படி இருந்தால் அவர்கள் அரசியல்வாதிகளாக
இருப்பது இல்லை என்பதும்.
*****





