பட்டாம்பூச்சி விளைவு
வெறிச்சோடிக்
கிடக்கும்
பாலை
நிலத்தில்
வெந்து
தணிந்து கொண்டிருக்கும்
கருவேலம்
காட்டில்
பசுமையைத்
தின்று தீர்த்த முட்கள்
தாகத்தை
உறிஞ்சிக் குடித்த வெடிப்புகள்
துளி
தேனின்றிப் போனாலும்
தேடும்
இறகுகள் இருப்பதை எண்ணி
உற்சாகமாய்ப்
பறக்கும்
ஒரு
பட்டாம்பூச்சியின்
சிறகசைப்பின்
விளைவோ என்னவோ
அதன்
வண்ணச் சிறகுகளையொத்த
வானவில்லைத்
தீட்டி
பல வண்ணப்
பூக்களைப் பூக்க வைக்கும்
கருமையைத்
திரட்டிக் கொண்டு
எங்கேயே
திக்குத் தெரியாமல்
அல்லாடிய
மேகம் ஒன்று திரும்பி வருகிறது
*****

No comments:
Post a Comment