ரொம்ப ரொம்ப புதுமையாக விலையில்லா
அதாவது இலவச தேர்தல் வாக்குறுதி ஒன்று?
விலையில்லா
அதாவது இலவச நிம்மதி ஒவ்வொருவருக்கும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கோப்பில் முதல்
கையெழுத்திட்டு வழங்கப்படும் என்று அறிவிப்பதுதான். இதை மட்டும் தேர்தல் வாக்குறுதியாக
வழங்கிவிட்டால், பிறகு செத்தான்ட சேகருதான். அதென்ன செத்தான்டா சேகரு என்றால் அங்குதானே
அது கிடைக்கிறது என்பது கூட காரணமாக இருக்கலாம்.
*****
மிக்சி, டிவி, கிரைண்டர் போன்றவற்றை
இலவசமாகக் கொடுக்கும் போது என்ன தோன்றியது?
சீக்கிரமே
மின் கட்டணம் உயரப் போகிறது என்று. விரைவில் தோற்றம் உண்மையாகவும் ஆகிப் போனது.
*****
ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைக் கொடுப்பது
அரசுக்கு இழப்பைத்தானே ஏற்படுத்தும்?
விலைவாசி
அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்து, அதனால் கிடைக்கும் ஜிஎஸ்டியும்
அதிகரித்தால் ஆயிரம் ரூபாய் இழப்பு என்பது ஜூஜூபீயாகப்
போய் விடும் வாய்ப்பும் இருக்கிறது. ஆக இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு கேள்வியாக இப்படியும்
முடிக்கலாம், மக்கள் பத்தாயிரம் செலவு செய்தால் கூட போதும் 8 சதவீத, 18 சதவீத ஜிஎஸ்டி
வரி விகிதங்களில் ஆயிரம் என்பது அசால்ட்டாக வந்து விடாதா என்ன?
*****
நீங்கள் கடைக்குச் சென்று இட்லி,
தோசை சாப்பிடும் போது முதலில் அதன் சுவையைப் பார்ப்பீர்களா? அல்லது அவற்றின் விலையைப்
பார்ப்பீர்களா?
சுவையையோ,
விலையையோ பார்ப்பதோ அந்தக் காலம். அதற்கு எவ்வளவு ஜிஎஸ்டி என்று முதலில் பார்ப்பதுதான்
இந்தக் காலம்.
*****
இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன்
வரிசையில் ஷங்கரின் அடுத்த படத்தின் ஒன்லைன் எப்படி இருக்கும்?
ரோபோ
ஆட்சி செய்தால் லஞ்சம் இருக்காது.
*****

No comments:
Post a Comment