26 May 2018

காக்கையின் அமுதம்


அழைப்பு
இலைகள் கையை ஆட்டி தடுத்தாலும்
மரத்தை விட்டு
பறவைகள் விலகுவதில்லை
மனிதர் கையை நீட்டி அழைத்தாலும்
பறவைகள் வருவதில்லை
*****
காக்கையின் அமுதம்
செத்துப் போய்
நாறிக் கிடக்கும் எலி
என்று சொல்லாதே
காக்கையின் பசி
என்று சொல்
மூக்கை மூடிக் கொண்டாவது
வாயைத் திறந்து
ஒரு காகத்தை அழை
*****

3 comments:

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...