26 May 2018

காக்கையின் அமுதம்


அழைப்பு
இலைகள் கையை ஆட்டி தடுத்தாலும்
மரத்தை விட்டு
பறவைகள் விலகுவதில்லை
மனிதர் கையை நீட்டி அழைத்தாலும்
பறவைகள் வருவதில்லை
*****
காக்கையின் அமுதம்
செத்துப் போய்
நாறிக் கிடக்கும் எலி
என்று சொல்லாதே
காக்கையின் பசி
என்று சொல்
மூக்கை மூடிக் கொண்டாவது
வாயைத் திறந்து
ஒரு காகத்தை அழை
*****

3 comments:

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...