27 May 2018

சொல்லத்தான் நினைக்கலாம்!


சொல்லத்தான் நினைக்கலாம்!
            1. சில குறிப்பிட்ட விளைவுகளைப் பார்க்கும் போது அது கிடைக்காமல் போனால் நிச்சயம் கோபம் ஏற்படத்தான் செய்யும். அப்படியெல்லாம் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டு வாழ வேண்டியதில்லை.
            2. மனிதர்கள் யாரை எப்போது எப்படி தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது. அதனால் அவர்களிடம் எச்சரிக்கையாக, கவனமாகப் பேச வேண்டும் என்பதல்ல பேசாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
            3. வார்த்தைகளை நிதானமாகப் பேச வேண்டும். அதுதான் நல்லது. என்ன பேசுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தையும் அவ்வபோது கேட்டுக் கொள்ள வேண்டும். லாஜிக் ஆன கேள்விகளைக் கேட்கத் தவறக் கூடாது. அப்போதுதான் ஒரு மரியாதை கிடைக்கும். லாஜிக் தவறாகக் கூட இருக்கலாம்.
            4. பிடித்த மாதிரிதான் வாழ வேண்டும். அதற்குதான் வாழ்க்கை. என்ன பிடித்திருக்கிறது என்பது வெளியில் தெரியக் கூடாது.
            5. நல்லதைச் சொன்னாலும் கோபத்தில் சொல்லி விடக் கூடாது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் உலகில் இருக்கிறோம்.
            6. எதற்காகவும் மிகுதியாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போகிறப் போக்கில் போய்க் கொண்டிருக்கவும். அப்படியே அதை விட்டு விடலாம் அல்லது அதுவே நம்மை விட்டு விடும்.
            7. யார் பெரியவர் என்ற எண்ணம் இருக்கிற வரை போட்டிகளும் இருக்கும், சண்டைகளும் இருக்கும். யார் சிறியவர் என்பதற்கானப் போட்டிகள், சண்டைகள் அவைகள்.
            8. சமாதானம் என்பது நீண்ட நேரம் சண்டை போட்டு விட்டோமே என்பதற்காக நாம் செய்து கொள்ளும் சால் சாப்புதான். பிறகுதான் மிக உக்கிரமான சண்டைகள் தொடங்குகின்றன.
            9. சண்டை என்று வந்து விட்டால் பீஷ்மராக இருந்தாலும் முள் படுக்கையில் படுப்பதைத் தவிர்ப்பது கடினம்.
            10. செய்வதற்கு முன் கடந்த கால அனுபவங்களை ஒரு முறை கலந்தாலோசிக்க வேண்டும். சென்ற முறை வாங்கிய அடி பலமாக இருக்கலாம்.
            11. எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். அது ஒரு பிரச்சனையில்லை. அதற்காகவே பிறந்துள்ளோம். பிறப்பின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடக் கூடாது.
            12. சிறிது நேரம் அதையே செய்து கொண்டிருந்தால் எதைச் செய்கிறோமோ அதில் ஆழ்ந்த கவனம் தானாக வந்து விடும். வன்முறைகள் எல்லாம் அப்படித்தான். கடைசியில் குற்ற உணர்ச்சி செத்து விடும்.
*****

2 comments:

  1. சிறிது நேரம் அதையே செய்து கொண்டிருந்தால் எதைச் செய்கிறோமோ அதில் ஆழ்ந்த கவனம் தானாக வந்து விடும். வன்முறைகள் எல்லாம் அப்படித்தான். கடைசியில் குற்ற உணர்ச்சி செத்து விடும்.

    அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக அவதானித்திருக்கிறீர்கள் ஐயா!

      Delete

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...