26 May 2018

காக்கையின் அமுதம்


அழைப்பு
இலைகள் கையை ஆட்டி தடுத்தாலும்
மரத்தை விட்டு
பறவைகள் விலகுவதில்லை
மனிதர் கையை நீட்டி அழைத்தாலும்
பறவைகள் வருவதில்லை
*****
காக்கையின் அமுதம்
செத்துப் போய்
நாறிக் கிடக்கும் எலி
என்று சொல்லாதே
காக்கையின் பசி
என்று சொல்
மூக்கை மூடிக் கொண்டாவது
வாயைத் திறந்து
ஒரு காகத்தை அழை
*****

3 comments:

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...