26 May 2018

படைப்பாளன் என்ற முறையில்...

படைப்பாளன் என்ற முறையில்...
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே
அல்லாடிக் கொண்டிருந்த படி
சற்றே நவீனமாக உடை அணிந்தவர்களிடம்
உலக இலக்கியம் கலந்து
அவர்களைச் சற்றே நயந்து
ஒரு வாய் டீ குடிப்பதற்காக
பேச நினைத்து கவிதைகளாய் உளறி
எழுத நினைத்து உரைநடையில் தடுமாறி
தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ளும்
பெருவெளியில் தீர்மானமின்றி அலைந்து
அதுவாக அது எழுதிக் கொள்ளும் என்ற
நம்பிக்கையில் எது குறித்தும் கற்காமல்
இது நாள் வரை இருந்து விட்டதை எண்ணி
இதை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும்
பின்னால் ஒரு பெருங்கூட்டம் வரும் என்று
அதற்கிடையில் அது செத்துக் கிடப்பதைப் பார்த்து
படைப்பாளன் என்ற முறையில்
சிரித்துக் கொள்வதைத் தவிர
வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பவன்
கழிவறைத் தொட்டியில் வீசி எறிகிறான்
அணிய முடியாத மீசை வைத்த முகமூடியை
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...