அந்த ரகசியக் கூட்டணி!
சென்னையின்
அந்தப் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலின் தனி அறையில் ஒரு முக்கிய சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.
வெளியே தேர்தல் காய்ச்சல் ஒருபுறம், சமூக வலைதளங்களில் வதந்தி காய்ச்சல் மறுபுறம் கொதித்துக்
கொண்டிருந்தது.
அறையினுள்
ரஜினி அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு தீர்க்கமான அமைதி. அவருக்கு எதிரே
கமல் தன் செல்போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதில் அவர்கள் இருவரையும் இணைத்து
வந்த வதந்திகள் டிரெண்டிங்கில் இருந்தன.
திடீரென
கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்தார் பார்த்திபன். அவர் கையில் ஒரு பெரிய கறுப்பு
நிறக் கோப்பு இருந்தது.
யாராவது
பார்த்தார்களா பார்த்திபன்? என்றார் ரஜினி குரலில் ஒருவித ரகசியம் ஒலிக்க.
இல்லை
சார், எல்லாரும் நம்மைப் பற்றி வரும் வதந்திகளை விவாதிப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள்.
நான் உள்ளே வந்ததைக் கூட யாரும் கவனிக்கவில்லை, என்றார் பார்த்திபன் தன் டிரேட்மார்க்
நக்கல் கலந்த புன்னகையுடன்.
கமல்
நிமிர்ந்து பார்த்தார். பிறகு பேசினார், அந்தத் தகவல்கள் எல்லாம் தயார்தானே? மக்கள்
இதைப் பார்த்தால் அதிர்ச்சியாகிவிடுவார்கள். குறிப்பாக அந்த லெட்டர் மிக முக்கியம்.
சமூக
வலைதளங்களில் அப்போதுதான் ஒரு செய்தி தீயாகப் பரவிக் கொண்டிருந்தது. ரஜினி – கமல் –
பார்த்திபன் மூவரும் இன்று மாலை ஒரு ரகசிய இடத்தில் சந்திப்பு! பெரிய அறிவிப்பு வெளியாகப்
போகிறது!
வதந்திகள்
பலவாறு சிறகு விரித்தன. அது ஒருவேளை அரசியல் கூட்டணியா? அல்லது அவர்கள் மூவரும் இணையும்
மெகா பட்ஜெட் படமா? எனப் பலரும் மண்டையை உடைத்துக் கொண்டனர்.
பார்த்திபன்
அந்தக் கோப்பை மேஜை மீது வைத்தார். இதில் எல்லாமே இருக்கிறது. ரஜினி சார், நீங்கள்
இதில் கையெழுத்திட்டால் போதும். எல்லாம் முடிந்துவிடும், என்றார்.
ரஜினி
அந்தப் பேனாவை எடுத்தார். கமல் ஆவலுடன் அருகில் வந்து நின்றார். பார்த்திபன் கேமராவைத்
தயார் செய்தார். கோப்பில் இருந்த அந்தத் தாளில் ரஜினி கையெழுத்திட்டார். அடுத்துக்
கையெழுத்திட கமல் தயாரானார்.
மறுநிமிடம்,
அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானது. உலகம் எதிர்பார்த்த அந்த ரகசியத் தகவல் வெளியானது.
அந்தப்
புகைப்படம் எதைப் பற்றியது என்பதற்கான விடை கிடைத்தது.
அவர்கள்
மூவரும் இணைந்திருப்பது எந்தப் படத்திற்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ அல்ல. அது வாக்காளர்
விழிப்புணர்வு மற்றும் தேர்தல் நடத்தை முறைகள் குறித்த ஒரு குறும்படத்தின் ஒப்பந்தம்!
அதில்
ரஜினி கையெழுத்திட்ட அந்தத் தாளில் எழுதியிருந்தது, வதந்திகளைப் பரப்பாதீர்கள், ஜனநாயகக்
கடமையை ஆற்றுங்கள்!
பார்த்திபன்
இயக்கிய அந்தக் குறும்படத்தில், ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து, தேர்தல் நேரத்தில்
பரப்பப்படும் பொய் செய்திகளை மக்கள் எப்படி அடையாளம் காண வேண்டும் என்று பாடம் எடுத்திருந்தார்கள்.
சமூக
வலைதளங்களில் பிரேக்கிங் நியூஸையும், வைரல்களையும் தேடியவர்கள், இப்போது தங்கள் ஓட்டுச்சாவடி
எங்கே என்று தேடத் தொடங்கினார்கள்.
பின் குறிப்பு : இந்த
உலகில் ஒருவர் போல ஏழு பேர் இருப்பார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும்
இச்சித்திரிப்பில் இடம்பெற்றிருக்கும் இப்பாத்திரங்கள் கோலிவுட்டின் பிரபலமான பாத்திரங்களைக்
குறிப்பிடுவது கிடையாது, மேலும் இவர்கள் ஹாலிவுட்டோடு தொடர்புடையவர்கள்.
*****

No comments:
Post a Comment