ஐ அம் பைன்! – ஓர் உலக மகா நடிப்பு!
நம்மூர்
கலாச்சாரத்தில் எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், நல்லா இருக்கேன், என்று சொல்வது
ஒரு கட்டாயம்.
வேலைக்குப்
போகிறோம், மெசேஜ்களுக்குப் பதில் சொல்கிறோம், மற்றவர்களைக் கவனித்துக் கொள்கிறோம்.
இரவு படுத்ததும் எதையும் யோசிக்கத் தெம்பில்லாமல் மொபைலைத் தேய்க்கிறோம்.
தொடர்ந்து
சுழலும் வாழ்க்கையில்,
தாங்க
முடியாத ஒரு கட்டத்தில்,
உடல்
சொல்கிறது, எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்.
உணர்ச்சிகள்
சொல்கிறது, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.
ஆன்மா
சொல்கிறது, ப்ளீஸ், கொஞ்சம் மெதுவாக போ!
ஞாபகம்
வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், நாம் எல்லாவற்றையும் சுமக்க வேண்டிய
அவசியம் இல்லை. ஐயோ தாங்க முடியவில்லை என்று கத்துவது ஒன்றும் கௌரவக் குறைச்சல் அல்ல,
அழுவதற்கு உரிமை உண்டு, சோர்வடைவதற்கு அனுமதி உண்டு.
விசயம்
என்னவென்றால், நாம் உடைந்த மெஷின் அல்ல, ரீசார்ஜ் தேவைப்படும் ஓர் உயிரியியல் படைப்பு!
அவ்வபோது ரெஸ்ட், ரிலாக்ஸ்தான் அந்த ரீசார்ஜ்.
நிஜ
வாழ்க்கையில் எமோஷனல் ஓவர்லோட் என்பது ஏதோ சினிமாவில் வருவது போல தலையைப் பிடித்துக்
கொண்டு கத்துவதெல்லாம் கிடையாது. அது ரொம்ப சைலண்ட்டான ஒரு வில்லன். ரெஸ்ட், ரிலாக்ஸ்
இவையெல்லாம் இல்லை என்றால் அந்த வில்லனின் என்ட்ரி மற்றும் அட்ராசிட்டி தவிர்க்க முடியாதது.
நமக்கு
ஓவர்லோட் இருக்கிறதா என்று நாமே செக் பண்ணிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா?
ஹோட்டலில்
மெனு கார்டைப் பார்த்தால், என்ன ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முழிப்பது, அதாவது,
சிம்பிள் டிசிஷன் கூட எடுக்க முடியாது.
உருப்படியாக
எதையும் செய்யாமல், சும்மா உட்கார்ந்திருந்தாலே டயர்டாக இருப்பது.
ரொம்பப்
பிடித்த விஷயங்களைக் கூட, அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப் போடுவது.
திடீரென்று
எரிச்சல் படுவது அல்லது யாரிடமும் பேசாமல் அப்படியே ஷட் டவுன் ஆகிவிடுவது.
ஆக இதில்
விசயம் என்னவென்றால், நம்மில் பல பேர் இரண்டு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்:
நாளைக்கு
பால் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும், ஆபீஸ்ல அந்தப் பைலை முடிக்கணும் – இப்படி ஒரு
மெண்டல் பிரசர். அத்தோடு, அந்தப் பையன் அப்படிப் பேசிட்டானே, இவங்க நம்மள தப்பா நினைப்பாங்களோ?
என்பன போன்ற உணர்ச்சிப் பாரங்கள்.
ஆரம்பத்தில்
சின்னதாகத் தோன்றும், ஆனால் முழு சிஸ்டத்தையும் கிராஷ் செய்துவிடும்.
இது
போன்ற நேரங்களில் ஐ அம் பைன் என்றெல்லாம் பிட்டைப் போட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.
நீங்கள் இருக்கும் சூழ்நிலையை மாற்றுங்கள். பத்து நாட்களுக்கு தலைமறைவாக எங்காவது போனாலும்
நல்லதுதான். ஒரு சின்ன ஓய்வு அல்லது ஓர் இடைவெளி அல்லது சில நாட்களுக்கு எதையும் கண்டு
கொள்ளாமல் இருப்பது போன்ற உத்திகள் உதவும். விசயம் இதுதான், ஒரே மாதிரி விசயம் ஒரே
மாதிரியாகத் தொடர்ந்து வேண்டாமே. கொஞ்சம் மாற்றி மாற்றிச் சுழன்று பாருங்கள். நீங்கள்
ஹேங் ஆக மாட்டீர்கள். ரெப்ரெஷாக இருப்பீர்கள்.
மற்றவர்கள்
கேட்டு ஐ அம் பைன் என்று சொல்வது உண்மையாகவோ, பொய்யாகவோ எப்படியோ இருக்கலாம். நம்மிடம்
நாமே அப்படி ஒரு கேள்வி கேட்டு ஐ அம் பைன் என்று சொல்லும் பதில் உண்மையாக இருக்க வேண்டும்
அல்லவா!
*****

No comments:
Post a Comment