22 Jun 2025

நாட்டில் எத்தனையோ தரமான சம்பவங்கள்!

யோசிக்க யோசிக்க அறிவைத் தாண்டியும் ஆச்சரியம் தரக் கூடிய விசயங்களில் ஒன்று :

கல்வியின் மூலம் கற்றுக் கொள்ளும் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அன்பு, சகோதரத்துவம், கூட்டுக்குடும்பம் என்று ஒவ்வொன்றையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

எங்கள் கிராமத்தில் படிக்காதவர்களும் அரைகுறையாகப் படித்தவர்களும் எப்படி கடைசி வரை பெற்றோர்களைப் பாதுகாத்தார்கள் என்பதும், படித்து வேலைக்குப் போனவர்கள் எல்லாம் எப்படி பெற்றோர்களை மறந்து தனிக்குடித்தனம் போனார்கள் என்பதும் இப்போது வரை யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

*****

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைக்கு ஓர் உதாரணம் :

இணைய வழியில் (ஆன்லைனில்) ஆடைகள் வாங்குவதை எதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்? இணைய வழியில் (ஆன்லைனில்) நாம் பார்க்கின்ற ஆடைகள் ஒன்றாகவும், நமக்குப் பொட்டலம் கட்டி (பார்சலில்) வருகின்ற ஆடைகள் வேறொன்றாகவும் இருக்கின்றன. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைக்கு அதுதான் தற்காலத்திற்கான சரியான உதாரணமாக இருக்கும்.

*****

மரண மாசு என்றால் என்றால் என்ன தெரியுமா?

மாசுபட்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடம். முதலிடம் பிடிக்கும் நாளே மரண மாசு.

*****

அண்மைக் காலமாக ஞாயிற்றுக் கிழமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் :

விடுமுறை நாளிலிருந்து முகூர்த்த நாளாகி விட்டது ஞாயிற்றுக் கிழமை.

*****

சின்ன சின்ன ஆசை என்பதெல்லாம் 90களின் குழந்தைகளின் (90s கிட்ஸ்களின்) காலம் என்றாகி விட்டது. பெரிய பெரிய ஆசைகளே இரண்டாயிரமாவது ஆண்டுகளின் குழந்தைகளின் (ஜென் இசட்டுகளின்) காலம் என்றாகி விட்டது. அப்படி ஒரு பெரிய பெரிய ஆசை :

ஆயுளுக்குள் ஒரு சுங்கச் சாவடிக்கு உரிமையாளராகி விட வேண்டும்.

*****

இந்தியாவும் தமிழகமும் ஒரே இடத்தில் இருப்பதற்கான புள்ளிவிவரத் தரவு :

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

என்ன ஒரு ஒற்றுமை. இந்தியாவும் இரண்டாம் இடம். தமிழகமும் இரண்டாம் இடம்.

*****

No comments:

Post a Comment