சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்
எவ்வளவோ
விளக்கங்கள்
எத்தனையோ
தத்துவங்கள்
எண்ணிச்
சொல்ல முடியாது
அவ்வளவு
ஆறுதல்கள்
அத்தனை
அழுகைகள்
கணக்கிட்டுக்
கொள்ள முடியாது
சிலர்
சோகமாக இருப்பார்கள்
சிலர்
சிரித்துக் கொண்டு இருப்பார்கள்
கண்ணீர்
அஞ்சலி பதாகைக்காக
மெனக்கெடுவார்கள்
பெரிய
மாலை கிடைக்கவில்லையே என்று
விசனப்படுவார்கள்
எல்லாம்
ஒரு முறை
நேர்ந்துவிட்ட
மரணத்துக்காக
இன்னொரு
முறை நேரும் என்றால்
யாரும்
அவ்வளவு சங்கடப்பட்டிருக்க மாட்டார்கள்
*****
No comments:
Post a Comment