கதைக்கும் கதைகள்
எது
ஒரு கதை என்பதற்கு
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
கோணம் இருக்கிறது
கோணத்தை
அளந்து கொண்டிருந்தால்
கதை
சொல்ல முடியாது
கதை
சொல்ல வேண்டிய
நிர்பந்தம்
ஏற்பட்டு விடும் போது
சொல்லித்தான்
ஆக வேண்டியிருக்கிறது
ஒரு
கொலைகாரர்
குற்றவாளிக்
கூண்டில் கதை சொல்கிறார்
தர்மசங்கடத்தில்
நிலைகுழைந்து போயிருப்பவர்
தன்னிலையை
விளக்க கதை சொல்கிறார்
கூனிக்
குறுகி நிற்பவர்
குற்றவுணர்வைப்
போக்கிக் கொள்ள கதை சொல்கிறார்
இயலாமையால்
நெளிபவர்
இதற்கு
மேல் என்ன செய்ய முடியும் என்று கதை அளக்கிறார்
தோல்வியில்
மேற்கொண்டு துவள முடியாவர்
கழிவிரக்கம்
கண்டு கதை சொல்கிறார்
கதை
சொல்லி விடும் போது
தீவிரம்
இறங்கி விடுகிறது
அது
தீவிர கதையா
சோதா
கதையா என்பது வேறு விசயம்
*****
No comments:
Post a Comment