அவனவன் கிரகம்!
இந்த
ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர்
ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறையை அந்தப்
படிப்பைத்தான் படிக்க வைக்க வேண்டும்.
எல்லாம்
எதற்காக? பிறந்து தொலைத்தாயிற்று என்றால் ஜாதகம் பார்க்க வேண்டியது கட்டாயம் ஆகி விடுகிறது.
ஒரு
மனிதம் பிறக்கும் போதே தலையில் ஜோதிடருக்கு எடுத்து வைக்க வேண்டிய தொகை எழுதப்பட்டு
விடுகிறது.
பிறகு
கல்யாணம் செய்வது அவசியமாகி விடுகிறது. கல்யாணம் செய்வதென்றால் ஜாதகப் பொருத்தமெல்லாம்
முக்கியம்.
காதல்
கல்யாணம் என்றால் ஜோதிடர் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடலாம். பெற்றோர் பார்த்து
வைக்கும் திருமணத்தில் அதையெல்லாம் செய்ய முடியாது. அவருக்கு ஒரு தண்டம் அழுதுதான்
ஆக வேண்டும். பிறகு இப்படியொரு துணையைச் சேர்த்து விட்டானே பாவி என்று பின்னர் ஒரு
அழுகை அழுது கொள்ள வேண்டும்.
எல்லாம்
எதற்காக? மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று எல்லாம் தொண்ணூறு நாளுக்காக. பிறகு,
இதற்காகவா ஜாதகமெல்லாம் பார்த்தோம் என்று அலுப்பு தட்டி விடும்.
திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில்தான் வாழப்படுகின்றன என்பது அனுபவப்பட்டவர்களுக்கே
தெரியும். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கடவுள் இந்த ஜோதிடர்களுக்கு ஆறு பொருத்தங்களுக்கு
மேல் இருந்தால் சேர்த்து வைக்கலாம் என்கிற உரிமத்தை (லைசென்ஸை) கொடுத்து விட்டார்.
அவர்கள் சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்து கொள்பவர்கள்தான் இதை
சர்வ ஜாக்கிரதையாக அணுக வேண்டும்.
இதிலிருந்து
தப்பிக்கவும் முடியாது? தப்பித்து எல்லாரும் அப்துல் கலாம் ஆகி விடவும் முடியாது. காமராசராகவும்
ஆகி விட முடியாது. ஆகையால் எல்லாரும் மாட்டிக் கொண்டு அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து
விடுங்கள். மறுபிறவியில் அனுபவிக்கலாம் என்று எதையும் மிச்சம் வைக்க நினைக்காதீர்கள்.
ஜோதிடர்
எம்.எஸ்., எம்.டி.கள் ஜோதிட பல்நோக்கு சம்பாத்திய முனையங்களில் (மல்ட்டி ஸ்பெஷாலிட்டி
கிளினிக்குகளில்) சம்பாதித்து விட்டுப் போகட்டும்.
என்ன
செய்வது? அவர்களுடைய கிரகம் அப்படி இருக்கிறது. நம்முடைய கிரகம் இப்படி இருக்கிறது.
ஒன்பது
கிரகம் உச்சம் பெற்ற ஒருவன் எம்.எஸ்., எம்.டி. படிக்காமலும் ஜோதிடராகிச் சம்பாதிக்க
இந்தியாவில் முடியும்.
*****
No comments:
Post a Comment