நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்
எதற்கும்
கலங்காத
ஊர்
நடுவே நின்ற பெருமரம்
இரண்டு
முறை நடுங்கியது
புயல்
காற்றைக் கண்டு
பயப்படாமல்
தொங்குமொரு
பறவைக்
கூட்டை நினைத்து
ஒரு
முறை நடுங்கியது
வேரோடு
சாய்ந்தும்
சேதாரமின்றி
தொங்கும்
கூட்டை நினைத்து
மற்றுமொரு
முறை நடுங்கியது
அறுவை
இயந்திரத்தின்
பற்சக்கரங்கள்
பட்ட போது
*****
No comments:
Post a Comment