விண்ணை முட்டிய மரங்களின் ஆர்ப்பாட்ட முழக்கம்!
நல்ல
வெயில்.
சாலையில்
நடந்து கொண்டிருந்தேன்.
அவ்வளவு
வெப்பத்தையும் பாவம் காலணி வாங்கிக் கொண்டு வெந்து போய் துடித்துக் கொண்டிருந்தது.
காலணியை நினைக்கப் பாவமாக இருந்தது. அடுத்த
முறையாவது காலணிக்கு ஒரு காலணி வாங்கிப் போட வேண்டும். பாவம் அதுதான் எத்தனை நாட்கள்
வெயிலிலேயே நடந்து கொண்டிருக்கும்?
தாளாத
வெயிலிலும் சாலையோரம் இருந்த மரங்கள் பச்சையத்தைப் பயன்படுத்தி, சூரிய வெப்பம் வீணாகாதவாறு
உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தன.
நூறு
நாள் வேலையைப் பத்து நிமிடம் பார்த்த அசதியில் வீரதீரப் பணியாளர்கள் மரங்களின் அடியில்
உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கான மதிய உணவை குப்ளான் மளிகைக் கடையில் வாங்கிய
பொருட்களைப் பயன்படுத்தி திரவாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி – இண்டேன் பிரிவு)
வீணாகாத வண்ணம் ஒண்டியப்பன் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் நஞ்சப்ப தம்புரான்
தயாரித்துக் கொண்டிருந்தார்.
திடீரென
மரங்களின் அடியில் தங்கள் கடமையை இம்மிப் பிசகாமல் செய்து கொண்டிருந்த முன்களப் பணியாளர்கள்
அலறியடித்துக் கொண்டு ஓடினர். சாலையோரங்களில் இருந்த மரங்கள் நடுசாலையில் நகர்ந்து
வந்து சாலை மறியல் செய்து கொண்டிருந்தன.
எங்களுக்கும்
விலையில்லா உணவுப்பொருள் வழங்க வேண்டும். மரங்களின் முழக்கம் விண்ணை முட்டியது.
*****
No comments:
Post a Comment