14 Jun 2017

இதனால் சொல்லப்படுவது என்னவென்றால்...


இதனால் சொல்லப்படுவது என்னவென்றால்...
நிறைய பொய்கள் சொல்லித்தான்
ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறார்கள்.
வாய் நிறைய நம்பிக்கைகள் தந்துதான்
சொத்தைப் பிடுங்குகிறார்கள்.
சிநேகமாகப் பேசித்தான்
பாக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பிடுங்குகிறார்கள்.
உழைத்துச் சம்பாதித்த காசுதான் ஒட்டும் என்கிறார்கள்
கமிஷன் வேலை பார்ப்பவர்கள்.
கல்விக் கூடங்களுக்குள் புகுந்தால் பீஸை முதலில் கட்டி விட்டு
நேர்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்
மாற்றிச் செய்வதில் இருக்கும் ஆனந்தத்தை உணர்ந்தவர்கள்
சொல்வதைத் தவிர்ப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...