15 Jun 2017

குறிப்புகள்


குறிப்புகள்
"பிடிக்கலேன்னா வேற மாத்திக்கோ!"
பில்லையும் கொடுத்து
‍ஆசையோடு வாங்கிச் சென்ற
புடவையையும் கொடுத்தார் அப்பா!
பிடிக்கவும் இல்லை,
மாற்றவும் போவதில்லை என்பதை
முகத்தைச் சுழித்த
ஒற்றைப் புன்னகையில்
காட்டி விட்டு வேலையைத் தொடர்ந்தாள்
அம்மா!
******

அதிகம்
இந்த கோடையில் வெக்கை அதிகம்
மழைக் காலத்தில் மழையும் அதிகம்
குளிர் காலத்தில் குளிரும் அதிகம்
இந்த வருட இலக்கின்படி
டாஸ்மாக்கில் குடித்தவர்களின்
எண்ணிக்கையும் அதிகம்
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...