15 Jun 2017

ஏறி இறங்கிய முகம்


ஏறி இறங்கிய முகம்
அடிக்கடி அவிழ்ந்து விழுந்த
கால்சட்டையைப் பார்த்த
பாண்டி சித்தப்பா
ஓலை பாம்பை அடித்து
இடுப்பில் கட்டி விடுவதாக
மிரட்டிய பின்பு
இடுப்பில் தங்கத் தொடங்கியது கால்சட்டை!
அன்றிலிருந்து ஏறுமுகமாக இருந்த பயபக்தி
பிறிதொரு நாளில்
இடுப்பில் தங்காத வேட்டியோடு
குடித்து விட்டு ரோட்டோரம் விழுந்த கிடந்த
பாண்டி சித்தப்பாவைப் பார்த்த போது
இறங்கு முகமாகிப் போனது!
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...