12 Jun 2017

சுள்ளிப் பொறுக்கையிலே!


மூன்று கால்
வீடு மாறிய போது
எடுத்துச் சென்ற பொருட்களில்
மூன்று கால் நாற்காலியும்
ஒன்று.
*****

சுள்ளிப் பொறுக்கையிலே!
"மவராசா நல்லா இருக்கணும்!"
என்று வாழ்த்திக் கொண்டே
ரியல் எஸ்டேட்டுக்காக
சுத்தம் செய்யப்பட்டிருந்த
கருவக்காட்டில்
சுள்ளிப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்
அன்னம்மா பாட்டி.
*****

சுதந்திரம்
ஓட்டுக்குக் கொடுத்தப் பணத்தை
வாங்கிய பேச்சியக்கா
தண்டல் கட்டி முடித்தாள்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...