10 Jun 2017

ஏது ஏழு குண்டல வாடா!


ஏது ஏழு குண்டல வாடா!
இந்தச் சாலை மட்டும்
இப்படி இல்லை என்றால்
சாலைகளில் மழை நீர்ச் சேகரிப்பு ஏது?
*****

சந்திப்புகள்
திறக்க சற்று நேரமிருக்கிறது என்பதற்காக
இன்று
தேநீர்க் கடை பெஞ்சில்
சந்தித்துக் கொள்கிறார்கள்
அதிசயமாகவும் மற்றும் அபூர்வமாகவும்
முருகேசனும், கதிரேசனும்.
ஒரு காலத்தில்
அடிக்கடி இந்தத் தேநீர்க் கடை பெஞ்சில்
சந்தித்துக் கொண்டவர்கள்தான்
இப்போதெல்லாம்
அடிக்கடி சந்தித்துக் கொள்வது
டாஸ்மாக் கடை ப்ளாட்பாரத்தில்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...