10 Jun 2017

யானை மீன் மனிதன்


அவர்கள் அப்படித்தான்!
இப்போது மீத்தேன் எடுக்க வந்தால்
விட்டு விடுக
பிறகு ஒரு காலத்தில் அவர்களே
விவசாயம் செய்ய வருவார்கள்
அதைக் கார்ப்பரேட் தொழிலாக்கி.
*****

யானை மீன் மனிதன்
கோயில் இருக்கும் யானைக்கு
வனாந்தரத்தின் கனவு
தொட்டியில் இருக்கும் மீனுக்கு
கடலின் நினைவு
அபார்ட்மெண்டில் இருக்கும் மனிதனுக்கு
அங்கிருந்து தப்பி விட வேண்டும் என்ற உணர்வு
*****

வெடிச் சிரிப்பு
ஊதிப் பெரிதாக்கிப் பார்த்த குழந்தை
சிரித்துக் கொண்டே இருக்கிறது
உடைந்துப் போன பலூனுக்காய்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...