29 May 2017

மலை சாட்சி


மலை சாட்சி
இந்தத் தேயிலைத் தூள்
தேநீராய் தயாரிக்கப்பட்டால்
சுறுசுறுப்புத் தரும் அன்றோ!
அப்படித்தான் வாங்குகிறேன்
சூப்பர் மார்க்கெட்டின் ஏசி அறையில்
அடுக்கப்பட்ட தேயிலைப் பாக்கெட்டுகள்
ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து.
இது எத்தனை பேரின்
வியர்வையை உறிஞ்சி
தேநீராய் ஊற்றுகிறதோ
என்ற மலையளவு கேள்விக்கு
அது விளைந்த மலையே சாட்சி.
*****

கணம்
செயின் பறிப்புச் சம்பவத்துக்குப் பிறகு
அநேகமாக அவள் விட்டு விட்டாள்
செயின் போடுவதை.
இப்போது பாதுகாப்பாய் உணர்ந்தாலும்
கழுத்து அறுபடுவதாய் உணரும் அவள்
அதை மட்டும் விட முடியாமல் தவிக்கிறாள்
பைக்குகள் கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...