ஓலம்
"மண்ணெணெய்யும் கொடுக்க மாட்டேங்றானுங்க!
சிலிண்டரும் அனுப்ப மாடடேங்றானுங்க! இருக்குற சீமை கருவேலங்களையும் அழிக்கிறேன்னு விறகுக்கும்
எதுவும் இல்லாம பண்ணப் போறானுங்களா?" ஓலமிட்டு அழுதாள் தாயம்மா.
*****
உயிர் தரா உயர் படிப்புகள்
பெரிய படிப்பு படிக்கப் போறேன்னு கிளம்பிய
மகனை, எந்தப் படிப்பும் படிக்காத அப்பா கேட்டார், "உசுருக்குச் சேதாரம் இல்லாம
படிச்சிட்டுத் திரும்பி வந்துடுவியா?"
*****
அது மட்டும்!
அந்தக் காகிகதத்தில் அது மட்டுமே எழுதப்பட்டு
இருந்தது, "படித்தவுடன் கிழித்து விடவும்!"
*****
No comments:
Post a Comment