28 Feb 2017

ஒண்ணுமே புரியலடா சாமி!


ஒண்ணுமே புரியலடா சாமி!
            நடுத்தர வர்க்கம் வீடு கட்டுவதற்கு இந்தியாவில் வழங்கும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களைப் பாருங்கள்.
            அரசு ஊழியர்கள் வேறு வழியில்லாமல் வரி கட்டி வருவதையும் கவனியுங்கள்.
            வரி ஏய்ப்பே கருப்புப் பணம் புழங்குவதற்கு முதன்மையான காரணம் என்ற வாதத்தையும் செவி கொடுத்துக் கேளுங்கள்.
            அப்புறம் நீங்களே சொல்லுங்கள்! கருப்புப் பணம் கட்டுக் கட்டாகப் புழங்கும் திரைத்துறைக்கு எதற்கு வரிச்சலுகை தருகிறார்கள்? வரியே இல்லாமல் பல படங்களை அவர்கள் ஓட்டு ஓட்டென்று ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் எப்படி? இருபது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கும், பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை இருபது ரூபாய்க்கும் விற்று. இதில் புரட்சிப் படங்களும் கணிசமாக அடங்கும்.
            அப்படியே நம் நிலையை கொஞ்சம் தள்ளி நின்று எட்டி நோக்குங்கள். நாம் ஓடி ஓடி நாம் வாங்கும் உப்பு, புளி, மிளகாய் என்று ஒவ்வொன்றுக்கும் வரி கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
            எல்லாம் தலைவரி. மன்னிக்கவும், தலைவிதி.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...