29 Oct 2016

முத்தங்கள் தீர்ந்த பிறகு ...


இருக்கட்டும்
சாப்பிட மறந்த
சாப்பாட்டு பொட்டலத்தை
மறக்காமல்
எடுத்துச் சாப்பிடவாவது
வீட்டில் இருக்கட்டும்
நான்கைந்து எறும்புகள்!
*****

முத்தங்கள் தீர்ந்த பிறகு ...
உன் அன்பான நேசத்தை
என்னால் புரிந்து கொள்ள முடியாமல்
போய் விட்டது.
கட்டுபாடுகள் என்னைச் சுற்றி
முள்வேலி முகாம்கள் போல் இருந்தன.
அப்போதும் உன்னை முத்தமிடும் ஆசை இருந்தது
நான் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
நீயும் கேட்காமல் இருந்து விட்டாய்,
என்னிடமிருந்து என்னைத் தவிர
வேறு எதையும்
எதிர்பார்க்க விரும்பாத நீ!
*****

சொல்லாதே!
"கிணற்றுத் தவளை என்று
சொல்லாதே!"
"ஏன் என்றேன்?"
"கிணறு எங்கே இருக்கிறது
சொல்?"
என்றது தவளை.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...