வன்மத்தின் உறக்கம்
இரவுப்
பொழுதுகளில்
நீ
உண்மையாக
இருக்கிறாய்
நடிக்காமல்
பொய்
சொல்லாமல்
ஏமாற்றாமல்
பரிகசிக்காமல்
வெறுக்காமல்
எரிச்சல்
மூட்டாமல்
ஏனென்றால்
அப்போது
நீ உறங்கிக்
கொண்டிருக்கிறாய்
இந்த
இரவுப் பொழுதில்
என்
பிரார்த்தனை
நீ விழித்தெழாமல்
இருக்க வேண்டும்
விழித்தெழிந்து
விட்டால்
எதையெல்லாம்
செய்யாமல்
நல்லவனாக
உறங்கிக் கொண்டு இருக்கிறாயோ
அதையெல்லாம்
செய்ய ஆரம்பித்து விடுவாய்
*****

No comments:
Post a Comment