நான் தேவகுமாரன் இல்லை!
இன்று
இருள்கிறது
மறுநாள்
விடிய
எந்தச்
சாலையை
எப்போது
நோண்டுவார்கள்
தோண்டியதை
எப்போது
மூடுவார்கள்
சாலையாய்ப்
பிறந்து விட்ட பாவத்திற்காக
அனுதினம்
ஏதோ
ஓர் அறுவை சிகிச்சை
பாவம்
சாலைகள்
இரு
மருங்கிலும்
ஏகப்பட்ட
மருத்துவமனைகள் மருந்தகங்கள்
அவசரகால
ஊர்திகள்
மெதுவாக
ஊர்கின்றன
காயம்பட்ட
சாலைகளில்
என்னை
ஏனடா
தேவகுமாரன்
என்கிறீர்கள்
சிலுவையில்
அறைவதற்கா
யாருக்குப்
பிரியமிருக்கிறது
என்னுடன்
இருக்க
என்
நிழலைத் தவிர
*****

No comments:
Post a Comment