30 Aug 2017

மெளனியாகி வாசகர்களைத் தக்க வைப்பவன்!

மெளனியாகி வாசகர்களைத் தக்க வைப்பவன்!
            பொதுவாக அண்மை காலமாக தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றிப் பேசுவதை பெரும்பாலும் எஸ்.கே. தவிர்த்து வருகிறான்.
            ஆதாயம் எந்தப் பக்கமிருந்து வரலாம் என்பதால்தான் எஸ்.கே. இப்படி நடந்து கொள்வதாக கண்டனங்கள் வந்து கொண்டிருப்பதால் அவன் அது குறித்து சில விளக்கங்களைச் சொல்ல கடமைப்பட்டவனாகிறான்.
            பிரிந்தவர் சேர்வதும், சேர்ந்தவர் பிரிவதும் ஆண்டாண்டு காலமாக அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது பற்றி பேசி, அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் சண்டையாகி தனக்கும் வாசகர்களுக்கும் ஒரு பிரிவு ஏற்பட்டு விடக் கூடாது என அஞ்சுகிறான் எஸ்.கே.
            வாய் மூடி மெளனியாய் இருப்பதன் மூலம் வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான் அவன்.
            மற்றடிப அரசியல் குறித்து நிறைய பேசலாம். ஆனால் மெளன விரதம் இருப்பதற்கு இது போன்ற உகந்த சூழல் எஸ்.கே.வுக்குப் பிறகு கிடைக்குமோ என்னவோ!

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...