இருட்டு – ஒரு தத்துவார்த்தத் தேடல்!
வெப்பம்
என்பது வெறும் தட்பவெப்ப நிலை அல்ல. அது ஒரு தண்டனை. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில்
சூரியன் நேரடியாக நம் தலைக்கு மேல் அமர்ந்து கொண்டு, நீ செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம்
செய், என்று நம்மை வறுத்துக் கொண்டிருக்கிறது.
மின்சாரம்
என்பது கடவுளைப் போன்றது. அது இருக்கும்போது யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது
இல்லாதபோதுதான் எல்லோரும் அதைப் பற்றி அழுதுகொண்டு, மின்வாரியப் பொறியாளர்களைத் தேடுகிறார்கள்.
தமிழகம்
தற்போது தென்னிந்தியாவிலேயே மின் தேவையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தச் சாதனையை
நாம் கொண்டாடுவதா அல்லது கரன்ட் இல்லாத இருட்டில் அமர்ந்து அழுவதா என்று தெரியவில்லை.
அனைவரும்
ஒரே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியை ஆன் செய்வது, ஒரு வழிப் பாதையில் ஒரே நேரத்தில்
நூறு லாரிகள் நுழைய முயற்சிப்பதைப் போன்றது. உள்ளூர் மின்மாற்றிகள் அழுதபடி வெடிக்கின்றன.
பொறியாளர்களுக்கு
உத்தரவு போகிறது, 30 நிமிடங்களில் சரி செய் என்று. இது ஒரு நல்ல ஜோக். 21,000 மெகாவாட்
சுமையைச் சுமக்க முடியாமல் கதறும் ஒரு எந்திரத்திடம், சீக்கிரம் எழுந்து ஓடு, என்று
சொல்வது ஒரு விதமான வர்க்கப் போராட்டம்.
வேறு
வழியில்லை. சேமிப்பு என்பதைப் பற்றி நாம் பேசியாக வேண்டும். நாம் ஏன் மின்சாரத்தைச்
சேமிக்க வேண்டும்?
சுற்றுச்சூழலைக்
காக்கவா? இல்லை.
அரசுக்கு
உதவவா? கண்டிப்பாக இல்லை.
உங்கள்
பணப்பையில் ஓட்டை விழாமல் இருக்க!
மின்சாரத்தைச்
சேமிப்பது என்பது உங்கள் பணத்தைச் சேமிப்பதுதான் என்பதை உணரும்போதுதான், தமிழனின் கைகள்
சுவிட்சை நோக்கித் தானாக நீளும்.
குண்டு
பல்புகளைத் தவிர்த்து எல்இடிக்கு மாறுங்கள், என்று அரசு சொல்கிறது. ஆனால், பல்பை மாற்றுவதை
விட, இருட்டில் அமர்ந்து தியானம் செய்வது அதிக லாபகரமானது.
அத்துடன்
ஜன்னல்களைத் திறங்கள். பகலில் ஜன்னலைத் திறந்தால் வெளிச்சம் வரும், கூடவே அக்கம் பக்கத்து
வீட்டுச் சண்டைகளும் இலவசமாகத் தெரியும். ஒரு மின்விளக்கு ஒளிர்வதால் விரயமாகும் மின்சாரம்
மிச்சமாகும்.
மின்
விசிறிகளைச் சுத்தம் செய்யுங்கள். அந்த விசிறிகளின் இறக்கைகளில் இருக்கும் தூசிச் சேர்த்துச்
சுழல்வது என்றால் டிரான்ஸ்பார்மரே வெடித்து விடும்.
பிரிட்ஜில்
சூடான உணவை வைக்காதீர்கள். உணவைச் சூடாக இருக்கும்போதே சாப்பிட்டுவிட்டால், பிரிட்ஜுக்கும்
வேலை இல்லை, உங்களுக்கும் ஆரோக்கியம்.
காற்றாலைகள்
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மின்சாரம் தயாரிக்கும். அதாவது, காற்று அடித்தால் நமக்கு
மின்சாரம். காற்று அடிக்காவிட்டால் நாம் விசிறியை வைத்து நமக்கே காற்று அடித்துக் கொள்ள
வேண்டும். இயற்கை எவ்வளவு அழகாக நம்மைச் சுழல வைக்கிறது!
இருட்டில்
அமர்ந்திருப்பது ஒரு கலை. அப்போதுதான் உங்கள் செல்போனின் பேட்டரி எவ்வளவு முக்கியம்
என்பது புரியும். மின்சாரம் என்பது ஒரு போதை. அது இல்லாதபோது ஏற்படும் உளவியல் அறிகுறிகள்தான்
மின் வெட்டு.
மின்சாரத்தைச்
சேமிப்போம்! இல்லையென்றால், எதிர்காலத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு,
அந்தக் காலத்தில் ஏசி என்று ஒன்று இருந்ததே, ஞாபகம் இருக்கிறதா? என்று நம் பேரக்குழந்தைகளிடம்
கதை சொல்வோம். அவை ஏன் இப்படி கதை விடுகிறீர்கள் என்று கலாய்க்கட்டும்.
மற்றபடி,
மகிழ்ச்சியாக இருங்கள், மின்சாரம் இருக்கும் வரை!
*****

No comments:
Post a Comment