13 Mar 2026

இரவின் நிறம்

இரவின் நிறம்

வெளிச்சம் வேண்டுமெனக் கதறிய போது

இருள் வந்தது

இருளுக்குப் பழகிய பின்பு

வலிகள் வந்தன

வலிகளை ஏற்றுக் கொண்ட

ஒரு நாளில் சிரிப்பு பிறந்தது

இத்தனை நாளாய்

இந்தச் சிரிப்பே

நீ எங்கிருந்தாய் என்ற போது

வெளிச்சத்தைத் தேடி

இருளைத் தொலைத்த ஒவ்வொரு பொழுதிலும்

உன் நிழல் போல இருந்தேன் என்றது

அந்தச் சிரிப்பு

நிழலா என்ற போது

உன் மீது பட்ட

வெளிச்சத்தின் இரவு

என்றது சிரிப்பு

*****

No comments:

Post a Comment