13 Mar 2026

தத்துவார்த்தமாக வாழ்தல்!

தத்துவார்த்தமாக வாழ்தல்!

நாயையோ பூனையையோ கண்டால்

அறவே பிடிக்காது அந்த இருவருக்கும்

அவ்வளவு பிடித்து

அப்படி வளர்த்த

மகனும் மகளும்

கைவிட்டுப் போன பிறகு

ஒரு பூனையை வளர்த்திருக்கலாம்

என்ற ஏக்கம்

அவர்களில் ஒருவருக்கு

வாக்கிங் போகையில்

கூடவே துணைக்கு வந்து திரும்பும்

தெருநாய்க்கு ஒரு ரொட்டியைப் போட்டிருக்கலாம்

என்ற குற்றவுணர்வு இன்னொருவருக்கு

என்ன இருந்தாலும்

பூனையையும் நாயையும் வளர்ப்பவர்கள்

அனாதைகளாவதில்லை என்று

அடிக்கடி தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது கூட யாதொன்றையும்

வளர்க்கப் பிரியமில்லாத

அந்த இருவரும்

*****

No comments:

Post a Comment