முரண் மாற்றங்கள்
தமிழ்த் திரையுலகின் முரண் மாற்றத்தைத்
திரைப்படங்களைக் கொண்டே விளக்க முடியுமா என்றால், முடியும்.
‘சூரிய
வம்சம்’ திரைப்படத்தில் சரத்குமாரும் தேவயானியும் ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்
பார்க்குது’ என்ற ஒரே பாடலில் உச்சத்தை எட்டிப் பிடிப்பார்கள். அதே ஜோடிதான்
‘3BHK’ என்ற படத்திலும் நடித்திருந்தது. உச்சத்தை எட்ட ஒரு முழு படமுமே தேவைப்பட்டது.
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கான முழு திரைப்படம் அது. அதுதான் எதார்த்தம்.
இதற்கு
முரணான மாற்றம் ரஜினியுடையது. அவர் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற திரைப்படத்தில் மெதுமெதுவாக
வாழ்க்கையின் போக்கில் உச்சத்தை அடையும் எதார்த்தமான திரைப்படத்தைத் தந்து, அண்ணாமலை,
அருணாச்சலம், படையப்பா என்று ஒரு பாடலில் உச்சத்தை நோக்கிச் செல்லும் திரைப்படத்தைத்
தந்தவர். அந்த ரஜினியிச தாக்கத்தில் உருவானதுதான் ‘சூரிய வம்சம்’. அதே ரஜினியிசத்தின்
பின்னோக்கிய வரலாற்றில் உருவான ‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படத்தின் தாக்கத்தில்
உருவானதுதான் ‘3BHK’.
*****
புலிக்குப் பிறந்த பூனை
புலிக்குப்
பிறந்தது பூனை ஆகுமா?
ஏன்
ஆகாது? ஆகும்!
பொதுவாகப்
பழமொழிகள் பொய்க்காது என்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உள்ளது.
எத்தனையோ
பேர் வியாபாரத்தில் மரண அடி வாங்கி, பின்பு சுதாரித்துக் கொண்டு அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
இப்படி பூனைக்குப் பிறந்து புலிகளானோர் எத்தனையோ பேர்.
ஆனால்,
திருபாய் அம்பானியின் மகன் அனில் அம்பானியோ அப்படி மீண்டு வராமல், புலிக்குப் பிறந்து
பூனையாகிப் போனதுதான் சோகம்.
*****

No comments:
Post a Comment