22 Jan 2017

மலரானவள்


மலரானவள்
"செடியில் வாடும் பூக்கள்
உன் கூந்தலில்
மீண்டும் மீண்டும்
மலர்கின்றன!
அந்த மலரில்
உயிர்த்தெழுகிறேன் நான்!"
என்றால்
சிரிக்கிறாய் நீ,
உதட்டில் ஆயிரம் மலர்கள்
மலர்ந்ததைப் போல!
*****

உலகம்
கையில் பிடித்த வானம்
பூமிக்குள் அடங்காதது!
கையில் அள்ளிய கடல்
வானிலிருந்து பிழிந்தது!
உள்ளங்கைக்குள்
இருக்கும் உலகம்
ஒருவரும் அறியாதது!
*****

No comments:

Post a Comment