பிரியாணிக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி!
என்னிடம்
எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பவரிடம்
கடன்
கேட்கச் சொல்லிப் பார்க்கிறது மனது.
*****
உலகமே
ஒரு கிரமமாகி விட்டது
கிராமத்து
வேலி சண்டை, வரப்புச் சண்டை போல
உலகத்திலும்
சண்டைகள் அதிகமாகி விட்டன.
*****
டாஸ்மாக்
இல்லாத தமிழகம் எப்படி இருக்கும்?
மனித
வளத்தில் பாஸ்மார்க் பெற்ற தமிழகமாக இருக்கும்.
*****
அமெரிக்கா
தொடங்கி வைத்த வர்த்தகப் போர்
அமெரிக்காவே
தோற்றுப் போகும் போது முடிவுக்கு வரும்.
*****
பங்சாங்கமே
பார்க்க வேண்டியதில்லை
அனைவரும்
விரும்பும் முகூர்த்த நாள்
ஞாயிற்றுக்
கிழமை.
*****
அசோகர்
காலத்திற்கும் நம் காலத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
அசோகர்
காலத்தில் சாலை ஓரத்தில் மரங்கள் நடப்பட்டன.
நம்
காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காகச் சாலை ஓரங்களில் நின்றிருக்கும் மரங்கள் வேரோடும்
வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படுகின்றன.
*****
பொதுக்கூட்டங்கள்தான்
காலந்தோறும் எப்படியெல்லாம் மாறி விட்டன.
ஒரு
பொதுக்கூட்டத்துக்குப் போனால் முன்பெல்லாம் இருநூறு ரூபாயும் பிரியாணியும் கிடைத்தது.
இப்போதெல்லாம் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி கிடைக்கிறது.
*****
No comments:
Post a Comment