19 Jun 2025

பிரியாணிக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி!

பிரியாணிக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி!

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பவரிடம்

கடன் கேட்கச் சொல்லிப் பார்க்கிறது மனது.

*****

உலகமே ஒரு கிரமமாகி விட்டது

கிராமத்து வேலி சண்டை, வரப்புச் சண்டை போல

உலகத்திலும் சண்டைகள் அதிகமாகி விட்டன.

*****

டாஸ்மாக் இல்லாத தமிழகம் எப்படி இருக்கும்?

மனித வளத்தில் பாஸ்மார்க் பெற்ற தமிழகமாக இருக்கும்.

*****

அமெரிக்கா தொடங்கி வைத்த வர்த்தகப் போர்

அமெரிக்காவே தோற்றுப் போகும் போது முடிவுக்கு வரும்.

*****

பங்சாங்கமே பார்க்க வேண்டியதில்லை

அனைவரும் விரும்பும் முகூர்த்த நாள்

ஞாயிற்றுக் கிழமை.

*****

அசோகர் காலத்திற்கும் நம் காலத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

அசோகர் காலத்தில் சாலை ஓரத்தில் மரங்கள் நடப்பட்டன.

நம் காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காகச் சாலை ஓரங்களில் நின்றிருக்கும் மரங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படுகின்றன.

*****

பொதுக்கூட்டங்கள்தான் காலந்தோறும் எப்படியெல்லாம் மாறி விட்டன.

ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போனால் முன்பெல்லாம் இருநூறு ரூபாயும் பிரியாணியும் கிடைத்தது. இப்போதெல்லாம் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி கிடைக்கிறது.

*****

No comments:

Post a Comment