மனம் காண்பதை உலகம் காண நாளாகும்!
இவ்வளவு
கஷ்டம் என்று நினைத்தால்
தம்புடி
கூட நகர்ந்திருக்காது
இதெல்லாம்
ஒரு கஷ்டமா என்று நினைக்க
வெகுதூரம்
நகர்வது அறியாப் பிழையென நிகழ்ந்தது
என்ன
காரணமென்றெல்லாம் தெரியாது
காரணம்
கண்டுபிடிக்கவும் தோன்றாது போனது
முடியுமா
முடியாதா என்பதா முக்கியம்
ஆர்வம்
இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியமானது
செய்ய
வேண்டும் என்று தோன்றியது
எத்தனை
முறை தோற்றாலும்
அதையே
செய்ய வேண்டும் என்று தோன்றியது
அதையே
செய்ய செய்ய
உலகம்
இன்று மேடையில் தாங்கிக் கொண்டிருக்கிறது
கண்ணுக்குத்
தெரியாத காட்சிகளை
உங்கள்
மனதுக்குப் பார்க்கத் தெரிந்தால்
சத்தியமாக
நீங்கள்தான் நீங்கள்தான்
உங்களால்
எதுவும் முடியும்
இப்போதுதான்
முடிய வேண்டும் என்பதன்று
எப்போது
வேண்டுமானாலும்
முடியும்
என்பது முடியும்
எப்போதும்
உங்கள் மனதில் தெரியும் காட்சிகளை
உலகம்
கண்களால் காண நாட்களாகும்
*****
No comments:
Post a Comment