29 Apr 2026

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

உலகம் முழுக்க இயந்திரங்கள் ஊடுருவிவிட்டன. இந்தியாவில் வேகம் குறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் இங்கேயும் சூடு பிடித்துவிட்டது.

எதை எடுத்தாலும் ஒரு மெஷின். துணி துவைக்க, காசு எண்ண, பார்கோடு படிக்க என எங்கு பார்த்தாலும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கலந்த மனிதர்களின் ராஜ்யம்.

முன்பெல்லாம் மனிதர்கள் மூளையை உபயோகிக்காமல் சில வேலைகளைச் செய்வார்கள். இப்போதும் பலர் அப்படித்தான் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மெக்கானிக்கல் வேலைகளை இனி மனிதர்கள் செய்யத் தேவையில்லை. அந்த இடத்தைப் பிடிப்பதற்கு ரோபோக்கள் வந்துவிட்டன.

ஆட்கள் தேவையில்லை, அவற்றுக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை, தொழிற்சங்கம் ஆரம்பிக்க மாட்டார்கள். அசுர வேகத்தில் வேலை செய்கின்றன. ரோபோக்களைப் பற்றி இப்படி பிள்ளைத்தமிழே எழுதி விட்டார்கள்.

பல கார் கம்பெனிகளில் உதவியாளர்கள் இப்போது வீட்டின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கார் தயாரிப்பு முழுவதும் ரோபோக்கள் கைவசம்.

ஒரு தனியார் வங்கி 1200 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரு ரோபோவை களம் இறக்கியிருக்கிறது. ஒரு சராசரி மனிதர் தன் வாழ்நாளில் மனைவியிடம் கேட்கும் கேள்விகளே ஐம்பதைத் தாண்டாது. ஆனால், இந்த ரோபோ இவ்வளவு பதில் சொல்கிறதாம்.

கடைகளுக்குப் போய் பொருள் வாங்குவதெல்லாம் பழைய பேஷன். இப்போது அமேசானும், பிளிப்கார்ட்டும் உங்கள் விரல் நுனியில். காசு கொடுக்க வங்கிக்குப் போக வேண்டியதில்லை. மொபைலில் தட்டினால் சோலி முடிந்தது.

ஏன், திருட்டைப் பிடிக்கக் கூட நாய்களை விட சிசிடிவி கேமராக்கள்தான் இப்போது விசுவாசமாக இருக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் ஹோட்டலில் சர்வர் தம்பிக்கு பதிலாக ஒரு தட்டுத் தடுமாறும் அல்லது சாப்பாடு பரிமாறும் ரோபோ வந்து நிற்கும்.

பெட்ரோல் போட ஆள் இருக்காது. டைம் ஆகிறது, சட்டென்று பெட்ரோலைப் பிடி, காரியத்தை முடி என்று ரோபோ கத்தக் கூடும்.

துணிக்கடையில் துணியை அணிந்து பார்க்கத் தேவையில்லை. ஒரு பட்டனைத் தட்டினால் அந்தச் சட்டையில் நீங்கள் எவ்வளவு அழகாக அல்லது அசிங்கமாக இருப்பீர்கள் என்று திரையிலேயே காட்டிவிடும்.

வெளிநாடுகளில் ரோபோ குரு என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பையனுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவனுக்குப் பதில் அந்த ரோபோ பள்ளிக்குச் செல்லுமாம்.

அதாகப்பட்டது, பையன் வீட்டில் படுத்துக்கொண்டு கேம் விளையாடுவான், ரோபோ அங்கே போய் பாடம் கவனிக்கும். என்ன ஓர் அற்புதமான கல்விமுறை! அதுமட்டுமல்ல, சீக்கிரம் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்களே பாடம் நடத்தும்.

கையில் கட்டியிருக்கும் வாட்ச் இப்போது ஒரு டாக்டர் போலப் பேசுகிறது. நீ இவ்வளவு நடந்திருக்கிறாய், உன் ரத்த அழுத்தம் இவ்வளவு, என்று மிரட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. பழைய திறமைகள் இனி செல்லாக் காசு. நீங்கள் படித்த படிப்புக்கும் இனி வரும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாறாவிட்டால், பழைய இரும்புச் சாமான்கள் விற்கும் கடையில் நாமும் ஒரு மூலையில் கிடக்க வேண்டியிருக்கும்.

புதுத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது இப்போது பிழைப்புக்கு மட்டுமல்ல, இருப்புக்கே அவசியம்.

ரோபோக்கள் வரட்டும், செயற்கை நுண்ணறிவு மிரட்டட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிந்திக்கும் வேலையை மெஷின்கள் இன்னும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை அல்லது அவை நம்மை விட புத்திசாலித்தனமாகச் சிந்திக்கின்றன என்ற நிலையில் இருக்கின்றன. அதனால் நாமும் கொஞ்சம் நுட்பமாகச் சிந்திக்கப் பழகுவோம்.

தொழில்நுட்பம் என்பது ஓர் ஓடும் ரயில். அதில் ஏறி அமர்ந்தால் பயணம். நான் ஏற மாட்டேன், தண்டவாளத்திலேயே நிற்பேன் என்றால் மரணம். முடிவு உங்கள் கையில்.

*****

No comments:

Post a Comment