துரதிர்ஷ்டத்தின் சங்கிலி
முத்தைத்
திரு பத்தித் திருநகை
அத்திக்கிரை
சத்திச் சரவண
எனக்கு
மட்டும் பஞ்சாமிர்தம்
விடுபட்டு
போய் விட்டதே முருகா
*
வார்த்தைகள்
அற்று விட்டன
சொற்கள்
சோர்ந்து விட்டன
வாக்கியங்களுக்கு
இனி வேலையில்லை
எழுத்துகளே
வேண்டாம் போ
ஒலிகள்
அனைத்தும் ஓடிப் போ
எந்த
நம்பிக்கையில்
இனி
என்ன
பேச
நூறு
ரூபாய் கடன் கொடுக்க
வக்கில்லாத
உன்னிடம்
*
நல்ல
கொழுப்பு உள்ள
ஆடுகளில்
ஒன்றே
கறுப்பு
ஆடாக இருக்கையில்
கெட்ட
கொழுப்பு உள்ள ஒருவன்
எப்படி
அதிர்ஷ்டக்காரனாக….
*
உன்
அன்புக்கு
நான்
பொருந்த மாட்டேன்
விட்டு
விடு
தாங்க
முடியாத வன்மம்
*****

No comments:
Post a Comment