22 Nov 2025

கடைசி வரை திருந்தாதவன்

கடைசி வரை திருந்தாதவன்

பள்ளிக்கூடத்தில் விட்டால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் பள்ளிக்கூடத்தில் திருந்தவில்லை

ஜெயிலுக்குப் போனால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் ஜெயிலிலும் திருந்தவில்லை

கல்யாணம் பண்ணி வைத்தால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் கல்யாணம் பண்ணியும் திருந்தவில்லை

ஒரு குழந்தை பிறந்தால் திருந்துவான் என்றார்கள்

அவன் குழந்தை பிறந்தும் திருந்தவில்லை

ஐம்பது வயதானால் திருந்திடுவான் என்றார்கள்

அவன் ஐம்பது ஆகியும் திருந்தவில்லை

இவனெல்லாம் கட்டையில் போகும் போதுதான் திருந்துவான் என்றார்கள்

அவன் கட்டையில் போகும் போதும் திருந்தவில்லை

அவனைக் கொலை செய்த வழக்கில்

ஐந்து பேர் கைதாகி உள்ளே போனார்கள்

*****

No comments:

Post a Comment