31 Jan 2023

ஆருடக்காரன் சொல்லாத ரகசியம்

ஆருடக்காரன் சொல்லாத ரகசியம்

ஆருடம் கேட்க வருபவர்கள்

நேரத்தை நாளினைத் துல்லியமாகக் குறிப்பிட்டு

அந்த நேரத்தில் அந்த நாளில்

என்ன நடக்கும் என்கிறார்கள்

இது நடக்குமா நடக்காதா என்று

துல்லியமாகவும் வினவுகிறார்கள்

எதிர்காலத்தில் சென்று வந்து பார்த்தவனைப் போல

ஆருடம் சொல்பவனும் சொல்லத் தொடங்குகிறான்

அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கையில்

கேட்பவர்களும் கேட்டுக் கொண்டு சொல்கிறார்கள்

அப்படித்தான் அவர்கள் குறித்த நாளில்

நடக்கிறதா என்பது யாருக்குத் தெரியும்

அந்த நாளில் அவர்கள் இருப்பதென்னவோ

வருங்காலத்தில் இன்னொரு நாளில்

இன்னொரு நேரத்தில் என்ன நடக்குமோ

என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆருடக்காரனின் அருகில்

இன்றைய நாளில் நடப்பதெல்லாம்

ஆருடக்காரன் சொல்லாமல் விட்டதினின்று தொடங்குகிறது

என்பது ஆருடக்காரன் மட்டும் அறிந்த ரகசியம்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...