30 Jan 2023

இரு கண்களினின்று ஆயிரம் கண்ணுடையாளாதல்


இரு கண்களினின்று ஆயிரம் கண்ணுடையாளாதல்

கொன்றழித்து விட்ட ஒரு பெண்ணுக்காகக்

கோயில் கட்டினார்கள்

கும்பிட்டார்கள்

கொன்றழித்த பெண்ணைக் குலதெய்வம் என்றார்கள்

அவளே குலம் காப்பவள் என்றார்கள்

அம்மன் என்று போற்றி துதி பாடினார்கள்

திருவிழா கொண்டாடி அம்மனைத் தணிவிப்பதாய்த்

தங்கள் கொண்டாட்டங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள்

ஒவ்வொரு வருட கொண்டாட்ட குஷியைக் காட்டி

பண வசூலைப் பெருக்கிக் கொண்டார்கள்

வசூலில் புரண்ட பணத்தைக் கண்ட பின்பு

அந்தக் கோயிலுக்காக

இரு பிரிவாகப் பிரிந்து அடித்துக் கொண்டார்கள்

குற்றுயிரும் குலையுயிருமாய்ப் பலர் கிடந்து

சிலர் மாண்டு போனார்கள்

எல்லாவற்றையும் கொன்றழித்த போது

கையறு நிலையில் ஏதும் செய்ய இயலாது

பார்த்துக் கொண்டிருந்தது போலவே

இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்

அப்போது இரு கண்ணிலிருந்து இப்போது

ஆயிரம் கண்ணுடையவளாகி விட்ட அம்மன்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...