31 Jan 2023

மீளா வினை

மீளா வினை

எல்லாரும் ஒரு நாள் நகரத்திற்குப் போவோம் என எதிர்பார்க்கவில்லை

முதலில் அப்பா போனார்

பிறகு அப்பாவுக்கு உதவியாய் அண்ணன் போனான்

அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சமைத்துப் போட

அக்கா போனாள்

அப்பாவும் அண்ணனும் இல்லாத நேரங்களில்

அக்காவைப் பார்த்துக் கொள்ள என

அம்மா போனாள்

அம்மாவுக்கும் வேலையென்று ஆன போது

வேலைக்குச் செல்லும் அக்காவுக்குத் துணை செல்ல என

நானும் போனேன்

எல்லோரும் நகரம் வந்தடைந்த முதலாண்டு

கோயில் திருவிழா பொங்கல் தீபாவளி என்று

சிலமுறைகள் கிராமம் போய் வந்தோம்

அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கலும் தீபாவளியையும்

நகரத்தில் கொண்டாடி விட்டு

கோயில் திருவிழாவுக்கென்று ஒரு முறை மட்டும் போய் வந்தோம்

திருவிழாவுக்காக வருடத்திற்கொரு முறை போய் வருவது

சிரமமாய்ப் போக

கோயிலொன்றையும் நகரத்தில் கட்டிக் கொண்டு விட்ட பிறகு

கிராமங்களுக்குத் திரும்ப

அது இன்னொரு நகரமாய் மாறும் காலம் வர வேண்டும்

நாங்கள் இப்போது குடியேறியிருக்கும்

முன்னொரு காலத்தில் கிராமமாய் இருந்த நகரத்தைப் போல

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...