23 Jul 2022

கடவுளுக்காகப் பிரார்த்தித்தல்

கடவுளுக்காகப் பிரார்த்தித்தல்

நான்கு பேர் கூட நன்றாக நிற்க முடியாது

வாகனத்தில் வந்தால் நடுசாலையில் நிறுத்த வேண்டியதுதான்

ஐந்து ஆறு என்றால் சாலை மறியல் ஆகி விடும்

ஒதுங்க இடமில்லையென்றால்

சுவர் மறைவில் பல்லிப் போல ஒதுங்கி

கண்களை மூடிக் கொண்டு சிறுநீர் பெய்து விடுகிறார்கள்

யாவற்றையும் நாலாபுறமும் நான்கு சிலைகள்

உட்கார்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன

தினமும் ஐயர் வருகிறார்

பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன

மக்கள் வருகின்றனர் வரிசை முறைப்படி

அர்ச்சனைகள் தொடர்கின்றன

கடவுள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது

சின்ன கோயில் என்றாலும்

ஒரு நாள் விடாமல் வருபவர்கள் இருக்கிறார்கள்

வருவோர் போவோர் யார் பிரார்த்திக்கா விட்டாலும்

நான் பிரார்த்திக்கிறேன்

இன்னும் கொஞ்சம் நாலாபுறமும்

இடம் விரிவாக்கித் தந்தால்

கோயிலை நான்கு முறை சுற்றி வரலாம்

நீயென்னவோ வேண்டுவோருக்கு எல்லாம் தந்து

உன்கேதும் இல்லாமல் இருந்து கொள்கிறாயே கடவுளே

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...