25 Apr 2022

மழை வேண்டல்

மழை வேண்டல்

மாடியில் சட்டைகள் காய்கின்றன

தொட்டிச் செடிகள் தண்ணீருக்காக ஏங்குகின்றன

மழை வரும் போழுதில்

காய்ந்தவை நனைகின்றன

தொட்டிச் செடிகள் மழைக்கு கை அசைக்கின்றன

அலுவல் முடிந்து

மாலை வந்து மாடியைப் பார்ப்பவள்

இல்லாத நேரத்தில் பெய்த மழைக்காகச் சபிக்கிறாள்

நனைந்திருக்கும் செடிகளைப் பார்த்ததும்

நீர் வார்த்த மழைக்கு நன்று சொல்கிறாள்

நனைந்து கிடக்கும் சட்டைகளை

வெறித்தபடி பார்ப்பவள்

மழைப் பெய்கையில்

வேர்களை நனைத்துக் கொள்ளும் செடிகளைப் போல

தன்னை நனைத்துக் கொள்ளாத துணிகள் இருந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள்

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...