27 Apr 2022

ஊர்வாசி

ஊர்வாசி

ஒவ்வொரு முறை

தீபாவளிக்கும் பொங்கலுக்கும்

வரும் போதெல்லாம்

ஊர் ஞாபகத்தையும் உறவுகளின் நினைவுகளையும்

சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான்

அத்தை மாமா சித்தப்பா சித்தி

பெரியப்பா பெரியம்மா மாமி மச்சான் என்று

மடியில் படுத்து மருள்கிறான்

சமயங்களில் பாச மிகுதியில்

தெரு நாய்களையும் பூனைகளையும்

ஆட்டுக்குட்டிகளையும் கட்டிப் பிடித்தபடி உறங்குகிறான்

ஊர்திருவிழா என்றால் கேட்ட பணத்தினும்

கூடுதலாய் அனுப்பிக் குதூகலிக்கிறான்

இப்படிப்பட்டவனுக்காக இன்னும் கொஞ்ச நாள்

விடுமுறைகள் நீளக் கூடாதா என்று நினைக்கையில்

சேக்காளிகளோடு கூடிக் குடித்துக் கூத்தடித்து

கண்ணில் படும் பெண்களிடம் வம்பிழுத்து

உள்ளூர் காவல் நிலையத்தில் நிறுத்தி விடுபவனை

உடனடியாக மாநகரம் நோக்கிக் கிளப்பி விட வேண்டியதாயிருக்கிறது

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...