28 Apr 2022

பூமிக்கு வராத வானம்பாடிகள்

பூமிக்கு வராத வானம்பாடிகள்

கூந்தல் காற்றில் அலைவதற்கெல்லாம்

கவிதை எழுதுபவர்கள்

முந்தானை உரசலை

சொர்க்கத்தின் தீண்டலாய்ச் சிலாகிப்பவர்கள்

வெட்டிய நகத்திற்காக

உயிர் போனதாகத் துடிப்பவர்கள்

இலேசாக சிணுங்கினாலும்

இதயம் துடிப்பது நின்று விட்டதாகப் புலம்புபவர்கள்

பலாத்காரப் பொழுதுகளிலும்

வன்கொடுமை நேரங்களிலும்

காணாமல் போய் பல ஆண்டுகள் கழித்து வெளிவருகிறார்கள்

அந்தர நிலவில்

அழகிய பெண்ணுக்கு

அற்புத தேசம் செய்யவும்

ஆராதனைகள் அனுதினம் புரியவும்

ரசித்துப் பேசி ருசித்துக் கொள்ளவும்

துணை நிற்க நேரம் போதவில்லை என்று புலம்பவும்

ஆபத்து அகன்றதும் புற்றை விட்டு புறப்படும் ஜந்துவைப் போல

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...