25 Sept 2021

மனதை வரைதல்

மனதை வரைதல்

பென்சில் கொண்டுப் போய் வைத்தார்களா என்ன

தாளைத் தானே தேடிக் கொண்டது

அம்மையின் குங்குமத்திலும்

இருக்கின்ற இலைகளிலும் பூக்களிலும்

நிறங்களைப் பிழிந்து கொள்கிறது

கைவிரல்கள் களிநர்த்தனம் புரிகிறது

சிறிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்

பொம்மைகள் பூனைகள் ஆடுகள் நாய்கள்

என்று வரைந்து தள்ளுகிறாள்

விருப்பப்படி இருக்கின்ற நிறத்தைக் கொடுக்கிறாள்

மனிதர்கள் நீலமாகவும்

பொம்மைகள் வெளிர் சிவப்பிலும்

பூனைகள் பச்சை நிறத்திலும்

ஆடுகள் சிவப்பு நிறத்திலும்

நாய்கள் ஊதா நிறத்திலும் உலவுகின்றன

ஒவ்வொரு படத்தையும் உற்றுநோக்கும் போது

எந்தப் படத்திற்கும் காதுகள் இல்லை

யாரும் யாருக்கும் எதையும் சொல்ல வேண்டியதில்லை

என்பதைச் சொல்கிறாளோ என்னவோ

யாரும் சொல்லாமல் படங்களை வரைகிறாள்

எது இருக்க வேண்டும் எது இருக்க வேண்டாம்

என்பதை அவளே தீர்மானிக்கிறார்கள்

பென்சிலும் தாளும் நாம் கொடுத்தால்

ஓவியங்களை வரைபவள்

அவளாக வரையும் போது மனதை வரைகிறாள்

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...