25 Aug 2021

மாவுக்கட்டின் கிறுக்கல்கள்

பெரிதென்று ஏதுமில்லை

நமக்குப் பெரிதாகத் தெரிகிறது

கை உடைந்ததை

அதற்கு மேல்

பெரிதாக நினைக்காத குழந்தை

மாவுக்கட்டு மேல்

கிறுக்க ஆரம்பிக்கிறது

*****

புலப்பாடு

கட்டுபவனுக்கு

தெரிந்த பின்

குட்டை கட்டிடமானது

குளம் அலுவலகமானது

ஏரி பேருந்து நிலையமானது

பின் எல்லாம் மாறியது

சாலை வெள்ளம் தேங்கும் இடமானது

*****

அங்கேயே இருக்கும் பொருள்

ஞாபகமாய்

மறந்து வைத்து விட்டு வந்த பொருள்

அங்கேதான் இருக்கிறது

ஞாபகம்தான் மறந்து விட்டது

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...