31 Jul 2021

மாடுகளும் நரியும்

நம் மாடுகள்

நம் மாடுகளுக்கு

சுவரொட்டிகளைத் தவிர

தர என்ன இருக்கிறது

சாக்கடையைக் குடித்துக் கொள்கின்றன

குழாயில் ஒழுகும் நீரை

சைடிஸைப் போல நக்கிக் கொள்கின்றன

வயிற்றில் நான்கு கிலோவுக்குக் குறையாமல்

பாலிதீன்கனை வைத்திருக்கின்றன

பார்ப்பவர்கள் விரட்டி விடும் போதெல்லாம்

பரிதாபமாகப் பார்க்கும் மாட்டின் பால்

காலையும் மாலையும் தேவையாக இருக்கிறது

கறந்த பின் வழக்கம் போல

விரட்டியடிக்கப்படுகின்றன மாடுகள்

*****

ஒரு நரிக்கு தெரியும்!

ஒரு நரிக்கு தான் நரியென்று தெரியாது

ஒரு புலிக்கு தான் புலியென்று தெரியாது

ஒரு பாம்பிற்கு தான் பாம்பென்று தெரியாது

ஒரு பூரானுக்கு தான் பூரான் என்று தெரியாது

ஒரு தேளுக்கு தான் தேள் என்று தெரியாது

ஒரு விசப் பூச்சிக்கு தான் விசப் பூச்சியென்று தெரியாது

ஒரு மனிதனுக்கு தான் நரியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் புலியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் பாம்பென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் பூரான் என்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் தேள் என்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் விசப் பூச்சியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் மனிதன் என்று மட்டும் தெரியாது

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...