29 Oct 2020

அரியதொரு நிகழ்வு

அரியதொரு நிகழ்வு

வாழ்க்கையின் ஒட்டுமொத்த வெறுப்பையும்

உமிழும் கணங்கள் வாய்க்கும் போது

தேவ கணங்கள் சிதறுகின்றன

சாத்தானின் கரங்கள் நீள்கின்றன

வந்து விழும் நாசகாரச் சொற்களில்

கோபம் தணிகிறது

தணிய வைத்த நாசகாரச் சொற்களிலிருந்து

சங்கிலித்தொடர் வெறுப்பு புறப்படுகிறது

மனதின் ஒட்டு மொத்த வன்மத்தையும்

சுமந்து செல்லும் ரயிலென ஆகி

தடம் புரளும் வன்மங்கள் அபூர்வமாக

தண்டவாளத்தில் முளைவிடும்

அன்புச் செடியிலிருந்து அரிதாக நிகழலாம்

அரிதுதான் எனினும் அரிதுக்காகக்

காத்திருக்கிறது பூவுலகு

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...